உடுமலைஅருகே கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம்

உடுமலைஅருகே கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம்

வன்முறை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திரிபுரா மாநிலத்தில் நடந்த வன்முறை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடிமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

உடுமலை அருகே குடிமங்கலம் நால் ரோட்டில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில், திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு அலுவலகத்தையும், மாவட்டக்குழு அலுவலகம் மீது நடத்தப்பட்ட வன்முறையை கண்டித்தும், தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என கண்டன கோஷம் எழுப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் குடிமங்கலம் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story