/* */

பாசன நீரை திருடுவோர் மீது நடவடிக்கை : உடுமலையில் நாளை காத்திருப்பு போராட்டம்

பரம்பிக்குளம்–ஆழியாறு பாசன நீரை திருவோர் மீது நடவடிக்கை கோரி உடுமலையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடக்கிறது

HIGHLIGHTS

பாசன நீரை திருடுவோர் மீது நடவடிக்கை : உடுமலையில்  நாளை காத்திருப்பு போராட்டம்
X

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன நீரை திருடுவோர் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பரம்பிக்குளம்– ஆழியாறு செயற்பொறியாளர் அலுவலகம் முன் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெறுவதாக விவசாய சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பி.ஏ.பி விவசாயிகள் நலச்சங்கம், திருப்பூர் மாவட்ட உப்பாறு பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், வட்டமலை ஓடைக்கரை அணை பாசன விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளதாவது: கடைமடைகளுக்கு பாசன நீர் வருவதில்லை, ஆயக்கட்டில் கடும் நீர் பற்றாக்குறை வருகிறது, வரும் குறைந்த அளவு நீரையும் தென்னை மட்டை ஆலை மற்றும் கோழிப் பண்ணை உரிமையாளர்கள் முக்கிய கால்வாய்க்கு இருபுறமும் பெரும் கிணறுகளை வெட்டி 25 குதிரை திறன், 50 குதிரை திறன் உள்ள நீர் இறைப்பான்களை பொருத்தி நீரை திருடிச்சென்று தொழிலுக்கு பயன்படுத்துகின்றனர்.இதனால், சராசரியாக ஆயக்கட்டு உழவர்கள் மூன்றில் ஒரு பங்கு நீர் உரிமையை இழந்து வருகிறார்கள்.

,நீண்ட காலமாக நடந்து வரும் இந்த நீர் திருட்டை தடுக்க கோரி, பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் கண்துடைப்பு மட்டுமே நடக்கிறது, உறுதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு கோடி லிட்டர் முதல் 5 கோடி லிட்டர் வரையிலான அனுமதியற்ற நீர் எடுப்பதால் விவசாயம் பாதிக்கிறது.

மேலும், நெகமம், செஞ்சேரிமலை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் விதிகளை மீறி விவசாய நிலங்களில் தென்னை மட்டை மில் நடத்துவதாலும், கெமிக்கல் வாஷிங் செய்வதாலும் அந்த பகுதியில் நிலத்தடி நீர் மிகப்பெரிய அளவில் மாசுபட்டுள்ளது.

பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன கால்வாயின் இருபுறமும் உள்ள விவசாய நிலங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.தொடர்கதையாகி போன இந்த சோகத்தை சமூகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரும் பொருட்டும், கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆகஸ்ட் 15 அன்று( நாளை) உடுமலைப் பேட்டையில் உள்ள பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




Updated On: 14 Aug 2021 1:18 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...