திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி கிடையாது

திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி கிடையாது
X

பைல் படம்

திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி செலுத்தப் படவில்லை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகள் அமைந்துள்ளன. 60 வார்டுகளுக்கு உட்பட்ட 17 ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த 32 இடங்களில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் காட்டி வருவதால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்து,தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி பற்றாகுறை காரணமாக இன்று தடுப்பூசி செலுத்தப்படமாட்டாது என மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
why is ai important to the future