/* */

திருப்பூர் மாநகராட்சியில் 8 வார்டுகளில் நாளை குடிநீர் வினியோகம் துண்டிப்பு

திருப்பூர் மாநகராட்சியில், குழாய் பராமரிப்பு பணியால், 8 வார்டுகளில் நாளை குடிநீர் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் மாநகராட்சியில்  8 வார்டுகளில் நாளை குடிநீர் வினியோகம் துண்டிப்பு
X

இது தொடர்பாக, திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி வெளியிட்டு உள்ள அறிக்கை: திருப்பூர் மாநகராட்சி , அவிநாசி சாலையில் உள்ள 26 லட்சம் கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டி பகிர்மானத்தின் குழாய் பாதையில், நீர்க்கசிவு ஏற்பட்டு உள்ளது.

இந்த குழாய் பாதையில் ஏற்பட்டுள்ள நீர்க்கசிவினை சரி செய்ய, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டு உள்ளது. எனவே, இப்பகிர்மானத்தில் குடிநீர் கால அட்டவணைப்படி 24 ம் தேதி ஒருநாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது.

அதனால், இக்குடிநீர் பகிர்மானத்தில் இருந்து விநியோகம் செய்யப்படும் வார்டுகள் 12,13,23,24,25,26,27(ப) மற்றும் 47 ஆகிய பகுதிகளில் குடிநீர் விநியோகம், திருத்திய கால அட்டவணைப்படி விநியோகம் செய்யப்படும். பொது மக்கள் குடிநீரினை சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று, அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Updated On: 23 Jun 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    நீர் நிலை அருகில் செல்ல வேண்டாம்: தேனி கலெக்டர் எச்சரிக்கை
  2. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  6. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  9. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  10. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு