திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி கிடையாது

திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி கிடையாது
X
திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில், வாக்காளர் பட்டியல் அடிப்படையில், டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, குறிப்பிட்ட எண்ணிக்கையில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், தடுப்பூசி பற்றாகுறை காரணமாக இன்று திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ai in future agriculture