/* */

இன்று தடுப்பூசி நடக்குமா - திருப்பூர் மாநகராட்சி சொல்வதென்ன?

திருப்பூர் மாநகராட்சியில், இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

HIGHLIGHTS

இன்று தடுப்பூசி நடக்குமா -  திருப்பூர் மாநகராட்சி சொல்வதென்ன?
X

தட்டுப்பாடு நிலவுவதால், திருப்பூர் மாநகராட்சியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறாது என்று, மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60, வார்டுகளில் 17, ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட 34, பகுதிகளில் தினசரி கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தது.

எனினும், தட்டுப்பாடு காரணமாக கடந்த மூன்று நாட்களாக தடுப்பூசி போடப்படவில்லை. இதனால் பொது மக்கள் சில தடுப்பூசி மையங்களில் வந்து காத்திருந்து, ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஏற்கனவே வாக்காளர் பட்டியல் அடிப்படையில் டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

இந்நிலையில், தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக இன்றும் திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனா தடுப்பூசி போடப்படமாட்டாது என, மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 12 July 2021 1:08 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  2. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  3. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  4. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  5. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  9. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே தோட்டத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை