/* */

திருமணத்துக்கு பெண் இருப்பதாகக்கூறி கேரளா வாலிபரிடம் பணம், நகை பறிப்பு: 5 பேர் கைது

திருப்பூர் அருகே, திருமணத்திற்கு பெண் இருப்பதாக அழைத்து கேரளா வாலிபரிடம் பணம், நகை பறித்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருமணத்துக்கு பெண் இருப்பதாகக்கூறி  கேரளா வாலிபரிடம் பணம், நகை பறிப்பு: 5 பேர் கைது
X

கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்,32. இவர், திருமணத்திற்கு பெண் பார்த்து வந்தார். அத்துடன், கேரளா நாளிதழில், மணப்பெண் தேவை என மார்ச் மாதம் விளம்பரம் செய்திருந்தார்.

இதற்கிடையில்,ராமகிருஷ்ணனை தொடர்பு கொண்ட ஒருவர், தான் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்தவர் என்றும், மணப்பெண் இருப்பதாகவும் போனில் தெரிவித்தார். இதை நம்பிய ராமகிருஷ்ணன், தனது நண்பர் பிரவீனுடன் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி காரில் பல்லடம் வந்தார்.

தன்னை தொடர்பு கொண்ட நபரிடம், பெண் குறித்து விசாரித்தார். அப்போது அங்கு வந்த நபர், ராமகிருஷ்ணனை ஒரு வீட்டில் உட்கார வைத்து பெண் அழைத்து வருவதாக கூறிச் சென்றார். சிறிது நேரத்தில் 8 பேர் கொண்ட கும்பலுடன் வந்து, அவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த 7 பவுன் செயின், 40 ஆயிரம் பணம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு அனுப்பிவிட்டனர்.

அதிர்ச்சியடைந்த ராமகிருஷ்ணன், ஆலத்தூர் போலீஸில் புகார் செய்தார். கேரளா போலீசார், திருப்பூர் போலீசரின் உதவியுடன் விசாரித்தனர். அவர்கள், திருப்பூர் மத்திய காவல் எல்லையில் இருப்பது தெரிய வந்தது. அங்கு வந்த கேரளா போலீசார், பாலக்காடு கஞ்சிக்கோட்டை சேர்ந்த விமல்,43, திருப்பூரை சேர்ந்த பிரகாஷ்,40, சிவா,39, விக்னேஷ்,23, மணிகண்டன்,25, ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

Updated On: 3 July 2021 1:22 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    DMK-வின் மூன்றாண்டு ஆட்சி எல்லா பக்கமும் கள்ளச்சாராயம் கஞ்சா தான்...
  2. லைஃப்ஸ்டைல்
    தங்கை திருமண நாள் வாழ்த்துக்கள்: மனதைத் தொடும் வாழ்த்துச் செய்திகள்
  3. லைஃப்ஸ்டைல்
    மூன்று முடிச்சால் இரண்டு மனங்கள் ஒரு மனதாகும் திருமணம்..!...
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்களின் வகைகளும் மேற்கோள்களும்
  5. வீடியோ
    சிறை கண்காணிப்பாளர் தான் என் கையை உடைத்தார்- SavukkuShankar !...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவின் பிறந்தநாளில் அன்பின் அலைகள்!
  7. சேலம்
    மேட்டூர் அணை நீர்மட்டம் 50.78 அடியாக சரிவு..!
  8. வீடியோ
    🔴LIVE : சிறை தான் உனக்கு சமாதி என காவல் துறை மிரட்டல் சவுக்கு சங்கர்...
  9. கோவை மாநகர்
    சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தான் என் கையை உடைத்தார்: சவுக்கு...
  10. தேனி
    தேனியில் குப்பை சேகரிக்கும் பணி: இந்து எழுச்சி முன்னணி அதிருப்தி