/* */

திருப்பூர்: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர் கொங்கணகிரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பூர்: டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை
X

கொங்கணகிரி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் புகார் தெரிவித்த பொதுமக்கள்.

திருப்பூர், காலேஜ் ரோடு கொங்கணகிரி பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை மூடக்கோரி, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று புகார்மனு அளித்தனர்.

இதுகுறித்து, அவர்கள் கூறுகையில், திருப்பூர் புஷ்பா தியேட்டரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில், கொங்கணகிரி அமைந்துள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோவில் இருக்கிறது. அருகில் உள்ள மங்கலம் ரோட்டில், தனியார் கல்லூரி, பள்ளிகள் செயல்படுகின்றன.

கொங்கணகிரி பஸ் ஸ்டாப் வழியாக தான் மாணவியர், பள்ளி குழந்தைகள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் செல்கின்றனர். கொங்கணகிரி பஸ் ஸ்டாப்பில் செயல்படும் டாஸ்மாக் கடையில், மது அருந்தும் குடிமகன்கள், குடித்து அங்கே படுத்துவிடுகின்றனர். குடித்து ஆபாசமாக பேசுவதும் தொடர்கிறது. இதனால் மாணவியர், பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே டாஸ்மாக் மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர்.

Updated On: 13 Sep 2021 2:08 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை