ஒரு அமரர் ஊர்தியும் இரண்டு உடல்களும்..! சர்ச்சையான சம்பவம்..!

ஒரு அமரர் ஊர்தியும் இரண்டு உடல்களும்..! சர்ச்சையான சம்பவம்..!

அமரர் ஊர்தி (கோப்பு படம்)

திருப்பூர் அரசு மருத்துவமனையில் இருந்து ஒரே அமரர் ஊர்தியில் கொண்டு செல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவமனை டீன் விளக்கம் அளித்துள்ளார்.

அருப்புக்கோட்டையை சேர்ந்த பாண்டி பிரபு என்ற நபர் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக, திருப்பூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து வடக்கு காவல் நிலைய காவலரிடம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் அளித்துள்ளனர்.

இதனை அடுத்து பாண்டி பிரபு உடலை அமரர் ஊர்தியில் ஏற்றியுள்ளனர். அதில் இரண்டு உடல்கள் ஏன் ஏற்றினீர்கள் என பண்டிபிரபுவின் தந்தை துரைராஜ் எதிர்ப்பு தெரிவித்து அதனை வீடியோவாக எடுத்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக திருப்பூர் அரசு மருத்துவமனை முதல்வர் முருகேசன் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் பாண்டி பிரபுவின் உடலை பிரேத பரிசோதனை முடித்து வடக்கு காவல் நிலைய காவலருக்கு தகவல் அளித்தவுடன் அவர் அமரர் ஊர்தி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு அழைத்திருக்கிறார். அதன் பின்னர் பாண்டி பிரபு உடல் அருப்புக்கோட்டைக்கு எடுத்துச் செல்ல வாகனம் புறப்பட்டது.

அப்போது அந்த அமரர் ஊர்தி செல்லும் வழியிலேயே விருதுநகருக்கு கொண்டு செல்லப்படவேண்டிய மற்றொரு உடலையும் கொண்டு செல்ல வேண்டும் என வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து அதே வாகனத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

அதனால் அந்த வாகனம் திரும்பி வந்து மற்றொரு உடலையம் எடுத்துச் செல்ல விருதுநகர் கொண்டுசெல்லப்படவேண்டிய உடலை ஏற்றினார்கள். அப்போது பாண்டிபிரபுவின் தந்தை ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்து தனி வாகனம் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்தோம் என விளக்கம் அளித்துள்ளார். இதன் விபரம் அனைத்தும் அமரர் ஊர்தி வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story