/* */

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 24 படுக்கையுடன் ஒமிக்ரான் தனி வார்டு துவக்கம்

திருப்பூர் அரசு மருத்துவமனையில் 24 படுக்கை வசதியுடன் கூடிய ஒமிக்ரான் தனி வார்டு துவங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர் அரசு மருத்துவமனையில்  24 படுக்கையுடன்  ஒமிக்ரான் தனி வார்டு துவக்கம்
X

திருப்பூர் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டுள்ள ஒமிக்ரான் தனிவார்டு.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஆயிரம் பேர் இறந்து உள்ளனர். 95 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், திருப்பூர் அரசு மருத்துவமனை, காங்கயம், தாராபுரம், உடுமலை உள்ளிட்ட இடங்களில் தனி வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. கோவேக்சின், கோவிசில்டு ஆகிய தடுப்பூசி செலுத்தி வருவதால் கொரோனா தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் துவங்கி உள்ளது. இதன் காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூர் அரசு மருத்துவமனைவில் கொரோனா வார்டுக்கு, அருகில் ஒமிக்ரான் தனி வார்டு துவங்கப்பட்டு உள்ளது. 24 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால், இங்கு சிகிச்சை அளிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.


Updated On: 4 Dec 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்