/* */

திருப்பூர்: ஓபிஎஸ்., ஆதரவாளர் மாணிக்கம் பாஜக.,வில் ஐக்கியம்

திருப்பூரில் நடந்த மாநில செயற்குழு கூட்டத்தில், ஓபிஎஸ்., ஆதரவாளர் மாணிக்கம் பாஜக.,வில் ஐக்கியமானது அதிமுக.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

HIGHLIGHTS

திருப்பூர்: ஓபிஎஸ்., ஆதரவாளர் மாணிக்கம் பாஜக.,வில் ஐக்கியம்
X

திருப்பூரில் நடந்த பாஜக., மாநில செயற்குழு கூட்டம் நடந்தது.

திருப்பூர் பாஜ., அலுவலகம் திறப்பு விழா மற்றும் மாநில செயற்குழு கூட்டம் திருப்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கலந்து கொண்டு, பாஜக., புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், அதிமுக வழிகாட்டுதல் குழுவில் இடம் பிடித்து இருந்த மதுரை சோழவந்தான் தொகுதி முன்னாள் ஏம்.எல்.ஏ மாணிக்கம் பாஜகவில் இணைந்தார்.

இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராகவும் அறியப்பட்டவர். அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்று வரும் நிலையில், அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மாணிக்கம், பாஜகவில் இணைந்தது அதிமுக.,வில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது தவிர, சோழவந்தான் முன்னாள் எம்எல்ஏ., பழனிசாமி, அமமுக., மாநில அமைப்பு செயலாளர் பாலமுருகன் உள்ளிட்ட சிலர் பாஜக.,வில் இணைந்தனர்.

Updated On: 24 Nov 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...