Begin typing your search above and press return to search.
திருப்பூர்: இருசக்கர வாகனத்தை திருடியவர் கைது
திருப்பூர் அருகே இருசக்கர வாகனத்தை திருடியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS
திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் இருசக்கர வாகனத்தை திருடர்களை பிடிக்க வடக்கு குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீஸார் கொண்ட தனிப்படையில் தேடி வந்தனர். போலீஸார் தேடலில், தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்த பாண்டியராஜன் 55, என்பவரை திருப்பூர் ரயில் நிலையம் முன் போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.