/* */

சிறுபான்மையினர் அரசு கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீடிப்பு

சிறுபான்மையின மாணவர்கள் அரசின் கல்வி உதவித்தொகை பெற பெற டிச., 15 ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிப்பு.

HIGHLIGHTS

சிறுபான்மையினர் அரசு கல்வி உதவித்தொகை பெற  கால அவகாசம் நீடிப்பு
X

இதுகுறித்து திருப்பூர் கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சிறுபான்மையினர்களாக அறிவிக்கப்பட்டு இஸ்லாமியர், கிறிஸ்துவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜைன மதத்தை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு அரசின் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2021–22 ம் ஆண்டுக்கான கல்வி ஆண்டில் 1 முதல் 10 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையும், ப்ளஸ் 1 முதல் ஆராய்ச்சி படிப்பு வரை, ஐடிஐ, பாலிடெக்னிக், செவிலியர், ஆசிரியர் பட்டப்படிப்பு, இளங்கலை, முதுகலை படிப்பவர்களுக்கும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஆகவே நடப்பு கல்வி ஆண்டில் உதவித்தொகை புதுப்பித்தல், புதிதாக விண்ணப்பிக்க தகுதியான மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் டிச.,15 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421–2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Updated On: 11 Dec 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    அண்ணாமலைக்கு சிக்கல் : பாஜவில் என்ன நடக்கும்?
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் வெளுத்து வாங்கிய கனமழை: ஒரே நாளில் 812 மி.மீ மழை பதிவு
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் திமுக செயற்குழு கூட்டம்
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  6. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  8. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை