/* */

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை நிறுவனங்களின் 2 நாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது.

HIGHLIGHTS

திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து  பின்னலாடை நிறுவனங்கள் ஸ்டிரைக்
X

விசைத்தறி.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. பின்னலாடை நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக பின்னலாடை நிறுவனத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளான நூல் விலை உயர்ந்து வருகிறது. சமீபத்தில் 30 ரூபாய் உயர்ந்து 350 க்கு விற்கப்படுகிறது. நூல் விலை உயர்வால் பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. ஆனால் நூல் விலை குறையாமல் உள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து 2 நாள் பின்னலாடை நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தது.

அதன்படி, திருப்பூரில் உற்பத்தி நிறுத்த போராட்டம் இன்று துவங்கியது. இந்த போராட்டம் காரணமாக பின்னலாடை நிறுவனங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Updated On: 17 Jan 2022 12:27 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...