/* */

நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: கலெக்டர் தகவல்

உழவர்கள் தங்கள் செல்போனில் உழவன் செயலி மூலமாக கூடுதல் விவரங்களை பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்தார்.

HIGHLIGHTS

நெல் பயிருக்கு காப்பீடு செய்து பயன்பெறலாம்: கலெக்டர் தகவல்
X

கலெக்டர் வினீத்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் நெல் -2 ( சம்பா ) பயிருக்கு இயற்கை இடர்பாடுகளால் இழப்பு ஏற்படும்போது விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும், நிலையான வருமானம் கிடைக்க திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் சாகுபடி செய்யப்படும் நெல் பயிருக்கு காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உடுமலை, மடத்துக்குளம், காங்கேயம், தாராபுரம், வெள்ளகோவில் வட்டாரங்களில் நெல்-2 சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு வருகிற 15-ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும்.

மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் பயிர் காப்பீட்டுத்தொகை பெற்று பயன் பெற முடியும். விவசாயிகள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், நடப்பில் உள்ள சேமிப்பு வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், நில உரிமை பட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்களுடன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், வணிக வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமாக பிரிமியம் தொகை ஏக்கருக்கு ரூ. 532 செலுத்தி பயிர் காப்பீடு செய்யலாம். உழவர்கள் தங்கள் செல்போனில் உழவன் செயலி மூலமாகவும் கூடுதல் விவரங்களை பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 12 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைத்தள உத்வேகத்தை உயர்த்தும் 7 உத்திகள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. சினிமா
    கையில் கட்டுடன் வந்த ஐஸ்வர்யா ராய்க்கு கேன்ஸ்-ல் அன்பான வரவேற்பு
  5. பூந்தமல்லி
    விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதித்த பேரூராட்சி தலைவர்...
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. கலசப்பாக்கம்
    டெங்கு மலேரியாவை தடுக்க நிலவேம்பு குடிநீர் வழங்கல்
  8. ஆரணி
    குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
  9. போளூர்
    சேத்துப்பட்டில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வீடு தோறும் ஆய்வு
  10. செய்யாறு
    செய்யாற்றில் பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்! காவல்துறை விசாரணை