திருப்பூர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளை

திருப்பூர் கோவிலில் உண்டியலை உடைத்து   பணம், நகை கொள்ளை
X

கோயிலில் கொள்ளை

திருப்பூர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம், நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் நல்லூர் பகுதியில் உள்ள அருள்மிகு வலம்புரி ஸ்ரீ செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக் கோவிலில் நாளை கோவில் ஆண்டு விழா நடைபெற உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோவிலுக்குள் புகுந்த பெண் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து பக்தர்கள் காணிக்கையாக அளித்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றார்.

இந்த காட்சி, கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. இது குறித்து திருப்பூர் நல்லூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிசிடிவி கேமிரா காட்சிகளை கொண்டு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture