/* */

லாட்டரி, கஞ்சா விற்பனை செய்த 5 பேர் கைது

நல்லூர் போலீஸ் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி, கஞ்சா விற்பனை செய்த 5 போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

லாட்டரி, கஞ்சா விற்பனை செய்த  5 பேர் கைது
X

பைல் படம்.

திருப்பூர் மாநகர நல்லூர் போலீஸ் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. நல்லூர் போலீஸார் செரங்காடு, சுப்பிரமணியநகர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது லாட்டரி வைத்து இருந்த மனோகரன், கணேசன், கவாஷ்கர், பழனியப்பன் ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், திருப்பூர் பிஎன் ரோடு போயம்பாளையம் காய்கறி சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த அருண்குமார், 27 என்பவரை அனுப்பர்பாளையம் போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Updated On: 7 Dec 2021 2:02 PM GMT

Related News