/* */

பருவநிலை மாநாடு வெற்றிப்பெற மரக்கன்று நடவு

காலநிலை மாற்றத்துக்கான தீவிரத்தை குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு, வெற்றி பெற வேண்டி மரக்கன்று நடப்பட்டது.

HIGHLIGHTS

பருவநிலை மாநாடு வெற்றிப்பெற மரக்கன்று நடவு
X

பருவநிலை மாநாடு வெற்றி பெற வேண்டி, பல்லடத்தில் மரக்கன்று நடப்பட்டது.

சிஓபி., 20 எனப்படும், காலநிலை மாற்றத்துக்கான தீவிரத்தை குறைப்பது தொடர்பாக பருவநிலை மாநாடு, ஸ்காட்லாந்து, கிளாஸ்கோவில் வரும், 12ம் தேதி நடக்க இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். மாநாடு வெற்றி பெற வேண்டி, மரக்கன்று நடும் நிகழ்ச்சி, பல்லடம் அருகேயுள்ள, காரணம்பேட்டை மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் நடந்தது.

ஊராட்சி தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். பூங்கா செயலாளர் பாலசுப்பிரமணியம், தி சாய் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் கோபிநாத் அருணாச்சலம், செயலாளர் சைலேஷ், திட்ட தலைவர் வேலு, பூங்கா தலைவர் மாரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பருவநிலை மாநாடு வெற்றி பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி, 'சிஓபி' என்ற வடிவமைப்புடன் பூச்செடிகள் நடப்பட்டன.

Updated On: 1 Nov 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  2. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  3. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  4. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  5. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  8. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி
  9. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  10. வீடியோ
    🤐ரகசியத்தை இப்போ சொல்ல முடியாது |🤔Savukku வழக்கறிஞர் தடாலடி !...