/* */

பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம் திருட்டு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம் பணத்தை மர்ம நபர் திருடிச் சென்றார்.

HIGHLIGHTS

பல்லடம்  அருகே வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.80 லட்சம் திருட்டு
X

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி தனபாக்கியம்,34, இவர்களுக்கு முத்துக்குமார்,17, என்ற மகனும், சுஷ்மிதா,15, என்ற மகளும் உள்ளனர். பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையம் திருக்குமரன் நகரில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காஜா பட்டன் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில், விருதுநகரில் உள்ள ராஜவேலின் தாய்க்கு உடல்நலம் சரியில்லாததால், அவரை பார்க்க கடந்த 3 ம் தேதி குடும்பத்துடன் சென்றிருந்தார். அனைத்து காரியங்களும் முடித்த பிறகு, பல்லடத்திற்கு திரும்பினார். தனது வீட்டின் முன்பக்க கதவை திறந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறந்து துணிகள் சிதறி கிடந்தன.

வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள், பீரோவை திறந்து அதில் இருந்த ஒரு லட்சத்து 80ஆயிரம் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, அவர் அளித்த புகாரின் பேரில், பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 25 Jun 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு