மடத்துக்குளம் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி

மடத்துக்குளம் பகுதியில் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி
X
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியில் மழை பெய்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் சுற்று வட்டாரத்தில், கடந்த சிலநாட்களாக வெயிலில் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. போதிய மழை இல்லாததால், வயல்களில் பயிர்கள் வாடிய நிலையில் காணப்பட்டது. மழையில்லாததால் கால்நடைகளுக்கும் தீவனம் பற்றாகுறை ஏற்பட்டதால், விவசாயிகள் கவலை அடைந்தனர்.

இந்நிலையில், இன்று காலையில் வெயில் கொளுத்திய நிலையில், அதிகளவில் இருந்தது. இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து சிறிது நேரத்தில், மடத்துக்குளம், வாளவாடி உள்ளிட்ட இடங்களில் திடீரென மழை பெய்ய துவங்கியது.

சுமார், இருபது நிமிடங்களுக்கு பெய்த பலத்த மழையால் ஓரளவு விளைநிலங்களுக்கு தண்ணீர் கிடைத்தது. சீதோஷ்ண நிலை மாறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags

Next Story
AI மரங்களை நடவு செய்வதில் புரட்சி: சரியான இடத்தை எப்படி கண்டுபிடிப்பது?