/* */

உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை; வேளாண் துறை அதிகாரி எச்சரிக்கை

Tirupur News- முத்தூர் பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை; வேளாண் துறை அதிகாரி எச்சரிக்கை
X

Tirupur News- உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- முத்தூர் பகுதிகளில் உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை இயக்குனர் எச்சரித்து உள்ளார்.

இது குறித்து ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் சுமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட கீழ்பவானி பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ள பவானிசாகர் அணையில் இருந்து ஆண்டுதோறும் இரு பிரிவுகளாக ஜனவரி, ஆகஸ்ட் மாதங்களில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீரை கொண்டு எண்ணெய் வித்து மற்றும் நஞ்சை சம்பா நெல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.

விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும் விதைகளுக்கு நிறுவனங்கள் முறையான இருப்பு பதிவேடு பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யப்பட்ட விதைகள் பட்டியல், விற்பனை பட்டியல், முளைப்பு திறன் சான்று, பதிவு சான்றிதழ் உட்பட பல்வேறு உரிய ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும். மேலும் விதை விற்பனை நிலையங்கள் தங்கள் நிறுவனத்தின் முன்பு கட்டாயம் தகவல் பலகை வைத்து விவசாயிகள் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் அனைத்து விதைகளின் விலை பட்டியல் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகள் வாங்கும் விதை குவியல் காலாவதி எண், விற்பனை செய்த நாள், வாங்குபவர் மற்றும் விற்பனை செய்பவரின் கையொப்பம் போன்ற விவரங்கள் சரியாக உள்ளதா? என்று சரி பார்த்து வாங்க வேண்டும்.

உரிமம் பெறாத தானிய மண்டிகளில் விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டாம். உரிமம் பெறாமல் விதைகள் மற்றும் காய்கறி நாற்றுகள் விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இவ்வாறு உரிமம் இல்லாமல் விதைகள் மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை மூலம் விதைகள் சட்டம் 1966-ன் படி கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் முத்தூர், வெள்ளகோவில், காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், இதுகுறித்து அதிக விழிப்புணர்வுடன் இருந்து உரிமம் பெறாத விதைகளை விற்பனை செய்தால், அவற்றை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 1 Nov 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சென்னை மாவட்ட தேர்தல் ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி | Election...
  2. வீடியோ
    இறுதி போட்டிக்கு முன் KKR அணி செய்த பூஜை !#kkr #ipl #iplfinal #ipl2024...
  3. வீடியோ
    Modi நாட்டுக்கு நல்லது பண்ணுறாரு நல்ல மனுஷன் !#modi #bjp #public...
  4. வீடியோ
    Modi கடவுளை விட பெரியவர் எனக்கு தந்தை மாதிரி அவர் !#modi #bjp #public...
  5. வீடியோ
    Modi கடவுள்னு சொல்லல ! ராமரை தான் கடவுள்னு சொல்லுறாரு !#modi #bjp...
  6. தொழில்நுட்பம்
    மரபணுவில் உள்ள பண்டைய வைரஸ் டிஎன்ஏ மன ஆரோக்கியத்தை எவ்வாறு...
  7. தொழில்நுட்பம்
    மீண்டும் திரும்பும் பூமியில் சூரியப் புயலைத் தூண்டிய மான்ஸ்டர் சன்...
  8. வழிகாட்டி
    காவல் நிலைய வழக்குகளின் அடிப்படை சந்தேகங்கள்..! சட்டம் அறிவோம்...
  9. உலகம்
    இஸ்ரேலிய வான்வழி தாக்குதலில் 37 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு..! சர்வதேச...
  10. உலகம்
    காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் 26 நாட்கள் அதிகரித்த வெப்பம் :...