/* */

சிவன்மலை ஆண்டவன் பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை

சிவன்மலை ஆண்டவர் பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை.

HIGHLIGHTS

சிவன்மலை ஆண்டவன் பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை
X

சிவன்மலை ஆண்டவர் பெட்டி (மாதிரி படம்)

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே பிரசித்தி பெற்ற சிவன்மலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்ற பெயரில் கண்ணாடி பெட்டி உள்ளது. இதில் ஆண்டவன் உத்தரவுப்படி ஏதாவது ஒரு பொருளை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம்.

சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, அந்த பொருளை கண்ணாடி பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி உத்தரவிடுவார். இவ்வாறு உத்தரவு பெற்ற பக்தர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகத்தை அணுகி தமது கனவில் உத்தரவான பொருளை பற்றி கூறுவார். கோவில் நிர்வாகத்தினர் கோவிலில் பூவைத்து சுவாமியிடம் உத்தரவு கேட்பார்கள். அவ்வாறு உத்தரவானதும் குறிப்பிட்ட அந்த பொருள் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைக்கப்படும்.

மற்றொரு பக்தரின் கனவில் சுவாமி வந்து, அடுத்த பொருளை சுட்டிக் காட்டும் வரையில், பழைய பொருளே ஆண்டவன் உத்தரவு கண்ணாடிப் பெட்டிக்குள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். இதற்கு முன்னர் ஆண்டவன் உத்தரவு பெட்டியில் மாங்கல்யம் வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெருந்துறையை சேர்ந்த பவானி என்பவரது, கனவில் குங்குமம் வைத்து பூஜை செய்ய ஆண்டவன் உத்தரவிட்டுள்ளார். இதை கோவிலில் வாக்கு கேட்டு உறுதிப்படுத்திய பிறகு நேற்று ஆண்டன் பெட்டியில் குங்குமம் வைத்து பூஜை செய்யப்பட்டது.

Updated On: 23 April 2021 9:32 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க