/* */

காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக வெற்றி: காங்கேயத்தில் பரபரப்பு

காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக வெற்றி: காங்கேயத்தில் பரபரப்பு

HIGHLIGHTS

காங்கிரஸுக்கு ஒதுக்கிய இடத்தில் திமுக வெற்றி: காங்கேயத்தில் பரபரப்பு
X

காங்கேயம் நகராட்சி தலைவர் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு திமுகவின் சூர்ய பிரகாஷ் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சித் தலைவர் பதவியை, காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியது. இங்கு, மொத்தம் உள்ள 18 வார்டுகளில், திமுக 10 இடங்களிலும் காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. அவ்வகையில், 10வது வார்டில் வெற்றி பெற்ற ஹேமலதாவின் பெயர், நகராட்சி தலைவர் பதவிக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலை நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளருக்கு பதிலாக, திமுகவின் சூர்ய பிரகாஷ் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இது, காங்கிரஸ் தரப்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

திமுக தலைமை ஒதுக்கிய காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக, வார்டு கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்த சூர்ய பிரகாஷை, நகராட்சி தலைவராக தேர்வு செய்திருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Updated On: 4 March 2022 7:48 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் அலை மோதிய பக்தர்கள் கூட்டம்..!
  2. ஈரோடு
    நம்பியூர் பகுதியில் வெளுத்துவங்கிய மழையால் உடைந்த குளம்..!
  3. ஈரோடு
    அந்தியூர் பெரிய ஏரியில் சிக்கிய 17 கிலோ எடை கொண்ட ராட்சத கட்லா
  4. ஈரோடு
    சென்னிமலை அருகே ரயில்வே நுழைவு பாலத்தில் தேங்கிய நீரில் மூழ்கிய...
  5. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  6. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  7. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!