/* */

ஊரடங்கு விதிமீறல்: காங்கயத்தில் 2 இறைச்சி கடைகளுக்கு அபராதம்

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில், கொரோனா ஊரடங்கை மீறி செயல்பட்ட 2 இறைச்சிக்கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.

HIGHLIGHTS

ஊரடங்கு விதிமீறல்: காங்கயத்தில் 2  இறைச்சி கடைகளுக்கு அபராதம்
X

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மளிகைக்கடைகள், இறைச்சி கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சிக்குட்பட்ட மூர்த்தி ரெட்டிபாளையத்தில், இரண்டு மாட்டிறைச்சி கடைகளை திறக்கப்பட்டு, இறைச்சி விற்பனை நடப்பதாக, அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் போலீஸார், இன்று அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது, கடையை திறந்து மாட்டிறைச்சி விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து 14, கிலோ இறைச்சியும், ஒரு கடைக்காரருக்கு ரூ.1,500, அபராதமும், மற்றொரு கடைக்காரருக்கு ரூ.3, ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. ஊரடங்கு விதிகளுக்கு புறம்பாக, கடையை திறந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காங்கயம் நகராட்சி கமிஷனர் மூர்த்தி தெரிவித்து உள்ளார்.

Updated On: 30 May 2021 12:11 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  3. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  4. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  5. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  6. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  7. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  8. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் கூட்டம்
  9. ஈரோடு
    ஈரோடு வந்த ரயிலில் கிடந்த 9.250 கிலோ கஞ்சா பறிமுதல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் பணிக்கு 71 பேர் தேர்வு