/* */

ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி

Auto Accident - காங்கேயம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

Auto Accident | Accident Tamil
X

காங்கயம், முத்துார் அருகே, ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்த விபத்தில், டிரைவர் உயிரிழந்தார்.

Auto Accident - முத்தூர் ஈஸ்வரன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முருகேஷ் (வயது 55). ஆட்டோ டிரைவர். நேற்று முருகேசன், அவரது மனைவி சத்யா (35), மகன் தீபக் (10) உறவினர்கள் ருத்ரபசுபதி (37), லலிதாம்பாள் (75), கந்தசாமி (65), சித்ரா (55) ஆகிய 7 பேரும், திருப்பூரில் உள்ள கோவிலுக்கு சென்றனர்.

அங்கு சுவாமி தரிசனம் முடித்து விட்டு, இரவு வீட்டிற்கு காங்கயம் - முத்தூர் சாலை வழியாக வந்தனர். ஆட்டோவை முருகேசன் ஓட்டி வந்தார். இரவு 7 மணியளவில் காங்கயம் - முத்தூர் சாலையில் வந்தபோது, முருகேசன் ஓட்டிச் சென்ற ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் முருகேசன் மற்றும் சத்யா, லலிதாம்பாள் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற நான்கு பேரும் சிறு காயங்களுடன் தப்பினர்.

படுகாயமடைந்த முருகேசன், சத்யா, லலிதாம்பாள் ஆகியோரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே முருகேசன் இறந்தார். படுகாயங்களுடன் இருந்த சத்யா மற்றும் லலிதாம்பாள் மேல்சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

காங்கயம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Aug 2022 10:06 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...