மூலனுாரில் ரூ. 3.28 கோடிக்கு பருத்தி ஏலம்

மூலனுாரில் ரூ. 3.28 கோடிக்கு பருத்தி ஏலம்
X

திருப்பூரை அடுத்துள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ. 3.28 கோடிக்கு பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடந்தது. 

திருப்பூரை அடுத்துள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், ரூ. 3.28 கோடிக்கு பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடந்தது.

திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 901 பேர், பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்.

அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.12,269க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.9,550க்கும், சராசரி விலையாக ரூ.11,550க்கும் விற்பனையானது. பருத்தியின் மொத்த அளவு 9,169 மூட்டைகள், குவிண்டால் 2976.84, மதிப்பு ரூ.3 கோடியே 28 லட்சத்து 73 ஆயிரத்து 869 ஆகும். இந்த மறைமுக ஏலத்தில் 21 வியாபாரிகள் பங்கேற்றனர்.

Next Story
why is ai important to the future