/* */

காங்கயத்தில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு; போலீசார் விசாரணை

காங்கயத்தில் அரிசி ஆலை உரிமையாளரின் வீட்டில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

காங்கயத்தில் 20 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் திருட்டு; போலீசார் விசாரணை
X

காங்கயத்தில், வீட்டு கதவுகளை உடைத்து,  20  பவுன் நகைகள்,  10  ஆயிரம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

காங்கயம் அய்யாசாமி நகர் காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. அரிசி ஆலை உரிமையாளர். கிருஷ்ணமூர்த்தி, நேற்று காலை 10 மணியளவில் குடும்பத்துடன் திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார். பின்னர் மதியம் 2 மணிக்கு வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் இரண்டு கதவுகளும் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து காங்கயம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடனடியாக வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து ஆய்வு மேற்கொண்டனர். வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 15 Aug 2022 4:17 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!