/* */

கூட்டுறவு வங்கியில் மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 5 பவுன் நகை, வைர கம்மல் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது.

HIGHLIGHTS

கூட்டுறவு வங்கியில் மேலாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி ரோடு அசோக்நகரை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 58). இவர் குண்டடத்தில் உள்ள ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா தாராபுரம் நிலவள வங்கியில் பணியாற்றி வருகிறார். மகன் சென்னையில் படித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை செல்லமுத்து, கவிதா இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பின்னர் மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கிரில்கேட் மற்றும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 5 பவுன் நகை, வைர கம்மல் உள்ளிட்டவை திருட்டு போயிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ. 3லட்சம் இருக்கும்.

செல்லமுத்து, கவிதா ஆகியோர் வேலைக்கு சென்றுள்ளதை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தாராபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், குற்றப்பிரிவு அன்புசெல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். வங்கி மேலாளர் வீட்டில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 31 March 2023 12:37 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க