தாராபுரம் அருகே வாலிபர் கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தாராபுரம் அருகே வாலிபர் கொலை; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
X

இறந்தவர் உடலை பார்வையிடும் போலீசார்.

திருப்பூர் தாராபுரம் அருகே கத்தியால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே திருமாலபாளையம் பகுதியில் புதிய வீட்டு மனைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த வீட்டு மனைகள் அமைந்துள்ள காலி இடத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

தகவல் அறிந்த தாராபுரம் டிஎஸ்பி தனராசு, இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால், கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரியாததால், போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags

Next Story
த.வெ.க., நிர்வாகிகளுக்கு எதிராக திராவிடர் விடுதலைக்கழகத்தைச் சார்ந்த புகார்