தாராபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து; இருவர் பலி, 3 பேர் படுகாயம்

தாராபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து;  இருவர் பலி, 3 பேர் படுகாயம்
X

விபத்துக்குள்ளான கார்.

தாராபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் பகுதியை சேர்ந்த நரேன், சுரேன் உள்பட 5பேர் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா சென்றிருந்தனர். அங்கு சுற்றிபார்த்த பின், மீண்டும் ஊருக்கு வருவதற்காக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த தொப்பம்பட்டி அருகே காரில் வந்துக்கொண்டிருந்தனர்.

தொப்பம்பட்டி கார் வந்துகொண்டிருந்தபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்தவிபத்தில் காரில் வந்த நரேன், சுரேன் ஆகிய இரண்டு பட்டதாரி வாலிபர்களும் சம்பவ இடத்தில் பலியானார்கள்.

மேலும், காரில் வந்த 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரையும் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Tags

Next Story
ai in future agriculture