/* */

தொழில் முனைவோர் திட்டத்தில் மீன் வளர்க்க விண்ணப்பிக்கலாம் - திருப்பூர் கலெக்டர் தகவல்

மீன் வளர்ப்போர், தொழில் முனைவோர் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் கலெக்டர் வினீத் தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

தொழில் முனைவோர் திட்டத்தில் மீன் வளர்க்க  விண்ணப்பிக்கலாம் - திருப்பூர் கலெக்டர் தகவல்
X

இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கை: தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவித்து அவர்களை மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பில் அதிக முதலீடு செய்யும் வகையில், பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

மீனவர்கள், மீன்வளர்ப்போர், சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்பு குழுக்கள், மீன் வளர்ப்போர் உற்பத்தியாளர் அமைப்பு. தனிநபர் தொழில் முனைவோர், தனியார் நிறுவனங்கள் இந்த திட்டத்தில் பயன்பெறலாம். பொது பிரிவினருக்கு 25 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் உதவியும், மொத்த திட்ட மதிப்பீட்டில் மானிய தொகையின் உச்சவரம்பு 1 கோடியே 25 லட்சம்; ஆதி திராவிடர், பழங்குடியினர், மகளிருக்கு 30 சதவீதம் மத்திய மற்றும் மாநில அரசின் நிதி உதவியும், மொத்த மதிப்பீட்டில் மானியத் தொகை உச்சவரம்பு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், ஈரோடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், வரும் 31 ம் தேதி ஆகும். கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் பெறலாம்.

இதில் விருப்பமுள்ளவர்கள், நல்லதங்காள் ஓடை அணை, கோனேரிப்பட்டி, தாராபுரம் என்ற முகவரியில் இயங்கும் மீன் வள ஆய்வாளர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். கூடுதல் விவரம் அறிய, 04242221912 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 6 July 2021 1:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!