Begin typing your search above and press return to search.
தாராபுரத்தில் தொடரும் மழை: நாற்று நடவு துவக்கம்
தாராபுரம் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால், நாற்றுநடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம், உடுமலையில் உள்ள அமராவதி அணை நீரை மையமாக வைத்து, திருப்பூர் மற்றும் கரூரில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் பயன் பெறுகிறது. உடுமலை பகுதியில் பெய்யும் மழையால், அமராவதி அணை முழு கொள்ளளவான, 90 அடியை எட்ட உள்ளது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்கால்களிலும் திறந்துவிடப்பட்டுள்ளது.
தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான அலங்கியம், கோவிந்தபுரம், சத்திரம், சின்னக்காம்பாளையம், கொளத்துப்பாளயைம் உட்பட பல பகுதிளைச் சேர்ந்த விவசாயிகள், நீர் வரத்து இருப்பதால், விவசாய நிலங்களில் நெல் சாகுபடி செய்ய தயாராகியுள்ளனர். அதற்காக நாற்றாங்கால் தயார்படுத்தும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.