Begin typing your search above and press return to search.
தடையற்ற ஆக்சிஜன் சிலிண்டர், படுக்கை வசதிகள் வழங்க கோரிக்கை
தடையற்ற ஆக்சிஜன் வினியோகம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தாராபுரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கொரோனா நோயாளிகளுக்கு தடையற்ற ஆக்சிஜன் வினியோகம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். இதில் பங்கேற்றவர்கள், கொரோன பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு தங்குதடையற்ற ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; படுக்கை வசதிகளையும் மருத்துவ உபகரணங்களையும் தடையின்றி வழங்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.
மேலும், தமிழகத்திற்காக நிதியை மத்திய அரசு அதிக அளவில் ஒதுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தி முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், சமூக இடைவெளியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.