/* */

தாராபுரத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளி கொலை: உறவினர்கள் சாலை மறியல்

தாராபுரத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளியை கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

தாராபுரத்தில் சுமைத்தூக்கும் தொழிலாளி கொலை:   உறவினர்கள் சாலை மறியல்
X

தாராபுரத்தில் கொலை செய்தவர்களை கைது செய்ய கோரி உறவினர்கள் கரூர் ரோட்டில்  திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த விராச்சிமங்கலத்தை சேர்ந்த நாகராஜ் மகன் கோபிநாத்,21, சுமைத்தூக்கும் தொழில் செய்து வந்தார். இந்நிலையில் கோபிநாத், டூ வீலரில் உப்பாறு அணையை அடுத்த மடத்துப்பாளை அருகே சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் கோபிநாத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

இது தகவல் அறிந்த தாராபுரம் போலீசார், அங்கு சென்று கோபிநாத் உடலை கைப்பற்றி, தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அரசு மருத்துவனைமனையில் இருந்து, திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. கோபிதாத் உடலை பெற, அரசு மருத்துவமனைக்கு வந்த 200க்கும் மேற்பட்டவர்கள், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூர் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த போலீஸார், சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததை தொடர்ந்து அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 18 July 2021 11:20 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்