Begin typing your search above and press return to search.
தாராபுரம் காளியம்மன் கோவிலில் விழா
அம்மனுக்கு, ஆட்டுகிடா வெட்டியும், சேவல்கள் அறுத்தும், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.
HIGHLIGHTS
தாராபுரம் காளியம்மன் கோவில், 200 ஆண்டு பழமை வாய்ந்தது. இத்திருக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் பூச்சாட்டுதலுடன் விழா துவங்கி, தொடர்ந்து 15 நாட்களுக்கு நடக்கும். இந்தாண்டைய விழா துவங்கியுள்ளது நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டி கொண்ட பக்தர்கள், அமராவதி ஆற்றில் இருந்து பூச்சட்டி கையில் ஏந்தி, உடலில் வேல் அலகு குத்தி, தாராபுரம் நகரம் முழுக்க ஊர்வலமாக வந்தனர். அம்மனுக்கு, ஆட்டுகிடா வெட்டியும், சேவல்கள் அறுத்தும், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர்.