தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து தாராபுரம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து தாராபுரம் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் காளிமுத்து தலைமை வகித்தார். பொது செயலாளர் சுப்பிரமணியம், ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளிப்பது, விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்திற்கு ஆதரவாக உள்ள உ.பி., அரசை கண்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.


Tags

Next Story
ai in future agriculture