/* */

அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது

தாராபுரம், மூலனூர் அருகே அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அமராவதி ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது
X

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த மூலனூர் நஞ்சை தலையூர் நாகாத்தம்மன் கோவில் அருகே அமராவதி ஆறு கடந்து செல்கிறது. இப்பகுதி ஆற்றில் மணல் கடத்தப்படுவதாக மூலனூர் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில், போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையில் போலீசார் சென்று பார்த்தபோது, டாட்டா சுமோ மற்றும் மினி டோர் வேனில் மணல் மூட்டைகளை கட்டி அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு நின்றிருந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் இருவரும் மூலனூர் மல்லம்பாளையம் பெரியகாடு தோட்டம் பகுதியை சேர்ந்த தனபால், 50, கார்த்திகேயன், 30,என்பதும், இருவரும் மணல் கடத்தியதை ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Updated On: 21 Jun 2021 1:11 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...