/* */

அரைகுறை வேலையால் விபரீதம்: சாலையோர குழியில் கவிழ்ந்தது கார்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே மேட்டுப்பாளையம் சாலையில் பயணித்து கொண்டிருந்த கார், கட்டுப்பாடிழந்து கவிழ்ந்தது.

HIGHLIGHTS

அரைகுறை வேலையால் விபரீதம்: சாலையோர குழியில் கவிழ்ந்தது கார்
X

அவினாசி – மேட்டுப்பாளையம் ரோட்டில், சாலையோரம் கவிழ்ந்த கார்.

ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் தீபக், 35. தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், தனது காரில், அவினாசி, மேட்டுப்பாளையம் வழியாக, நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு சென்று கொண்டிருந்தார். கருவலுார் நரியம்பள்ளிபுதுார் அருகே சென்ற போது, சாலையோரம் இருந்த குழியில், கார் கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக அனைவரும் தப்பினர்.

அவினாசி காவல்துறையினர், கவிழ்ந்த காரை மீட்க உதவினர். காவல் துறையினர் கூறுகையில்,'இந்த சாலையின் ஓரத்தில், அத்திக்கடவு – அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணிக்காக குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. தோண்டப்பட்ட குழி, சரியாக மூடப்படாததால், கார் நிலைத்தடுமாறி, விபத்தை எதிர்கொண்டது,' என்றனர். சாலை முறையாக செப்பனிடாததால் விபத்து ஏற்பட்டது, வாகன ஓட்டிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

Updated On: 6 Nov 2021 3:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...