/* */

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் குளமாக மாறிய சாலை

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் குளம்போல் தேங்கியதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

HIGHLIGHTS

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைப்பால் குளமாக மாறிய சாலை
X

குடிநீர் குழாய் உடைப்பால் குளம்போல் தேங்கிய நீர்.

அவினாசி – சேவூர் சந்திப்பு சாலையின் முகப்பில், நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் விநியோக குழாய் உடைந்து தண்ணீர் கசிந்து வருகிறது.

திருப்பூர் மாநகராட்சிக்கான இரண்டாவது குடிநீர் திட்டத்திற்கு இக்குழாய் வழியாக தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

தண்ணீர் வெளியேறுவதால் சாலை அரிக்கப்பட்டு குழியாகவே மாறி வருகிறது. இப்பகுதியில் பூக்கடை உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. ஏராளமான மக்கள் நடமாடுகின்றனர். குழாய் உடைந்து வெளியேறும் தண்ணீர் சாலையில் வழிந்தோடி கடைகளின் முன் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். சாலையில் தேங்கும் தண்ணீரால் குளமாக மாறி வருகிறது.

Updated On: 16 Jan 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. பொன்னேரி
    ஆற்றில் சட்டவிரோதமாக மணல் கொள்ளை
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் நாளை நீட் தேர்வு
  7. ஈரோடு
    ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், ஈரோடு ஆத்மா மின்மயான அறக்கட்டளை...
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  9. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  10. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...