/* */

அவிநாசி பகுதியில் பலத்த காற்றுடன் மழை: வாழைகள் சேதம்

அவிநாசி பகுதியில் காற்றுடன் பெய்த கனமழையில் சுமார் 7 ஆயிரம் வாழை மரங்கள் சரிந்து சேதமானது.

HIGHLIGHTS

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையுடன் பலத்த காற்றும் வீசுகிறது. அவிநாசி சுற்று வட்டாரத்தில் சேவூர், வேட்டுவபாளையம், நல்லிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் பலத்த காற்று வீசியதால் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. அவிநாசி சுற்று வட்டாரத்தில் மட்டும் 7000 வாழைமரங்கள் கீழே சாய்ந்து உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கர் வாழை சாகுபடி செய்தால் முட்டு கூலியோடு 60 முதல் 75 ஆயிரம் வரை செலவு ஆகிறது. தற்போது அடித்த பலத்த காற்றில் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. இதற்கு அரசு இழப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Updated On: 25 Sep 2021 5:41 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!