/* */

பயணிகள் அதிகரிப்பு: அவிநாசியில் இருந்து கூடுதல் பஸ் இயக்கலாமே

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், பலரும், தங்கள் ஊர் திரும்புவதால், அவினாசியில் இருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

பயணிகள் அதிகரிப்பு: அவிநாசியில் இருந்து கூடுதல் பஸ் இயக்கலாமே
X

தீபாவளி முடிந்து ஊர் திரும்பிய மக்களால், அவினாசி பேருந்து நிறுத்தத்தில், கூட்டம் அதிகமாக இருந்தது.

தீபாவளி பண்டிகை முடிந்த நிலையில், பலரும் தங்கள் ஊர் திரும்பு தொடங்கியுள்ளனர். இதனால், பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் அவினாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள, தங்கள் உறவினர் வீடுகளுக்கு, தீபாவளி பண்டிகை கொண்டாட வெளியூரை சேர்ந்த பலரும் வந்தனர். பண்டிகை முடிந்து, அவர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப தொடங்கிவிட்டனர்.

இதனால் திருப்பூர், சேலம், ஈரோடு, கோவை, மேட்டுப்பாளையம், சத்தி ஆகிய இடங்களின் சந்திப்பு பகுதியாக உள்ள அவினாசி பேருந்து நிறுத்தத்தில், பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. சில ஊர்களுக்கு பஸ்கள் குறைவாக இருந்ததால், பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது; பலரும், படிகட்டில் தொங்கியபடி பயணித்தனர். போக்குவரத்து காவல் துறையினர் பயணிகளை, பேருந்தில் ஏற்றிவிட்டு, நெரிசலை சமாளிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு தீர்வாக, நெரிசல் குறையும் வரை கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 7 Nov 2021 1:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  3. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  5. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  6. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  7. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  8. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  10. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...