Begin typing your search above and press return to search.
கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிப்பு
வீட்டு வாசலில் கோலம் போட்டிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து நகை பறித்து சென்ற ஆசாமியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
திருப்பூர் மாவட்டம், அவினாசி பங்களா தோட்டம் பகுதியில் வசிப்பவர் மதலைமேரி, 46. கடந்த, 24ம் தேதி இரவு, கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தயாராகும் வகையில், வீட்டு வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மதலைமேரி அணிந்திருந்த, 6 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு மாயமானார்.
அதிர்ச்சியடைந்த மதலை மேரி, சப்தம் போடவே, வீட்டுக்குள் இருந்த அவரது மகன் வெளியே வந்து, தேடினார். ஆனால், மர்ம ஆசாமி, அங்கிருந்த தோட்டத்தின் வழியாக ஓடி, தலைமறைவானான். அவினாசி காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து, மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.