Begin typing your search above and press return to search.
அவிநாசியில் நாளை மின்நுகர்வோர் குறைத்தீர் கூட்டம்
மின் நுகர்வோர் கூட்டத்தில் கலந்து கொண்டு அனைவரும் பயன்பெற வேண்டும் என அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்து உள்ளார்.
HIGHLIGHTS
தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (செப்.,22 ம் தேதி) காலை 11 மணிக்கு மின் நுகர்வோர் குறைத்தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் கலந்து கொண்டு மின் நுகர்வோர் குறைகளை நேரில் கேட்டறிந்து நிவர்த்தி செய்கிறார். மின் நுகர்வோர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு, மின்வாரிய அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் விஜயஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.