/* */

போலீஸ், நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் சிசிடிவி!

திருமுருகன்பூண்டி காவல்துறை மற்றும் வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில், வஞ்சிபாளையத்தில், கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

போலீஸ், நண்பர்கள் குழு அறக்கட்டளை சார்பில் வஞ்சிபாளையத்தில் சிசிடிவி!
X

கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்காக, வஞ்சிபாளையம் நால் ரோட்டில் நிறுவப்பட்டுள்ள கம்பம். 

குற்றச்செயல்களை தடுக்க, காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டுபிடிப்பதில் சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கேமரா பதிவுகள் பேருதவி புரிகின்றன.

அவ்வகையில், வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் திருமுருகன்பூண்டி காவல்நிலையம் ஒத்துழைப்புடன், வஞ்சிபாளையம் பகுதியில் மூன்றாவது கண் என்று அழைக்கப்படும் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி நடைபெறுகின்றது.

அதன்படி,வஞ்சிபாளையம் அரசுப் பள்ளி எதிரே உள்ள நான்கு ரோட்டில், முதலாவது சிசிடிவி அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், தெக்கலூர் பிரிவு, கனியாம்பூண்டி பிரிவு உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது.

விருப்பம் உள்ளவர்கள், இப்பணிக்கு நிதி உதவி, பொருள் உதவி செய்து, வஞ்சிபாளையம், கனியாம்பூண்டி பகுதிகளின் பாதுகாப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கும்படி, அறக்கட்டளை நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 31 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’