/* */

திருப்பூர்: அடிப்படை வசதிகள் கேட்டு பிளாசம் குடியிருப்போர் மனு

அடிப்படை வசதிகள் கேட்டு, கிணத்துக்காடு பிளாசம் குடியிருப்போர் சார்பில், ஊராட்சி நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பூர்: அடிப்படை வசதிகள் கேட்டு பிளாசம் குடியிருப்போர் மனு
X

புதுப்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபா கூட்டம். 

திருப்பூர் மாவட்டம், அவிநாசி தாலுகா, புதுப்பாளையம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது. ஊராட்சித் தலைவி கஸ்தூரி பிரியா தலைமையில் நடைபெற்ற கிராம சபா கூட்டத்தில், கிராம மக்கள் திரளாக பங்கேற்று ஆலோசனை நடத்தினர். ஊராட்சியின் தேவை, கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில், வஞ்சிபாளையம் கிணத்துக்காடு பகுதியில் உள்ள பிளாசம் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில், ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில், பிளாசம் குடியிருப்பு வளாகத்தினுள் தார்சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்; தெரு விளக்கு பிரச்சனையை சரி செய்ய வேண்டும்; குடிநீரில் குளோரின் கலந்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையை எடுக்க வேண்டும், குப்பைகளை அகற்றி தூய்மைபடுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

Updated On: 3 Oct 2021 10:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!