/* */

திருப்பூர்: அவிநாசியில் போலீசை தாக்கிய 4 பேர் கைது

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், ரோந்து பணியின் போது போலீசை தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

திருப்பூர்: அவிநாசியில் போலீசை தாக்கிய 4 பேர் கைது
X

திருப்பூர் மாவட்டம், அவிநாசி மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் சர்வேஸ்வரன், போலீஸ் திருவேங்கடம் ஆகியோர், தெக்கலூர் பகுதியில், வழக்கம் போல் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, செங்காலிபாளையம் மூலக்காட்டு தோட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதாக, அவர்களுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில், அப்பகுதிக்கு சென்ற போலீசார், இது தொடர்பாக நடராஜ், சுதன், சட்டாம்பிள்ளை, லோகேஸ்வரன், முத்துசாமி ஆகியோரிடம் விசாரனை நடத்தினர். அப்போது திடீரென அங்கிருந்த மரக்கட்டையை எடுத்து போலீஸ் திருவேங்கடத்தை, அவர்கள் அடித்தனர்.

இதில், திருவேங்கடத்திற்கு காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து நடராஜ், சுதன், சட்டாம்பிள்ளை, முத்துசாமி ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 66, மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவானவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 7 Jun 2021 5:24 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...