Begin typing your search above and press return to search.
வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு தடுப்பூசி
வாணியம்பாடி உழவர் சந்தையில் விவசாயி வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன
HIGHLIGHTS
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று தீவிரமடைந்து வருவதால் பொது ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்களான விவசாயிகள் காய்கறிகளை பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய எடுத்து வரக் கூடிய நிலையில்
கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், உழவர் சந்தை காய்கறி வியபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகாலை 4-மணி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி தலைமையில் நடைபெற்றது. உடன் வேளாண்மை துறை அதிகாரி முருகதாஸ், வெங்கடேசன், சுகாதாரப் பணியாளர்கள், நகராட்சிப் பணியாளர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் இருந்தனர்.