திருப்பத்தூர் மாவட்டத்தில் விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்தவன் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்தவன் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்த நவீத்

திருப்பத்தூர் மாவட்டத்தில் விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்த கொள்ளையனிமிருந்து 20 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மாஞ்சக்கொள்ளை புதூர் பகுதியில் அமைச்சர் துரைமுருகன் பண்ணை வீட்டிலும், அதே பகுதியில் வாணியம்பாடி தனியார் பள்ளி தாளாளர் செந்தில் குமார் என்பவர் பண்ணை வீட்டிலும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி வீட்டின் கதவுகளை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே சென்றனர்,

வீட்டில் பணம் நகை மற்றும் பொருட்கள் எதுவும் இல்லாததால் பண்ணை வீடு முழுவதும் கண்காணிப்பு கேமராவில் காட்சிகள் பதிவாகி இருக்கும் என எண்ணி ஹார்ட் டிஸ்க் கைப்பற்றி எரித்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

மேலும் வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் ஜூன் 23ஆம் தேதி ஆசிரியர் வசீம் அக்ரம் மற்றும் வாணியம்பாடி முஸ்லிம்பூர் அபூபக்கர் தெருவை சேர்ந்த அதாவுர் ரஹமான் என்பவர் வீட்டிலும் ஜூலை மாதம் 13ஆம் கொள்ளையடித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டதன் பேரில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நவீத் என்ற இளைஞரை கைது செய்து தீவிர விசாரணை செய்ததில் வாணியம்பாடியில் 2 வீடுகளில் 20 சவரன் தங்க நகையையும் மற்றும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பள்ளி தாளாளர் செந்தில் குமார் ஆகியோர் பண்ணை வீடுகளிலும் கொள்ளையடித்தை ஒப்புக்கொண்டார்

வாணியம்பாடியில் முஸ்லிம்பூர் பகுதியில் வீட்டுக்குள் நுழைய முடியாதபடி சுற்றுசுவர் இருந்ததால் மேல் மாடியில் சென்று வீட்டிற்குள் நுழைய கம்பியை வளைத்து ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனை கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்தியதாக தெரிவித்ததை கேட்டு காவல்துறையினர் அதிர்ந்து போயினர்

Tags

Read MoreRead Less
Next Story