/* */

ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 5 டன் ரேசன் அரிசியை பறக்கும் படை போலீஸார் பறிமுதல் செய்தனர். 3 பேர் கைது

HIGHLIGHTS

ஜோலார்பேட்டை அருகே ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்
X

ஆந்திராவிற்கு கடத்த முயன்ற ரேசன் அரிசியை லாரியுடன் பறக்கும் படை போலீஸார் பறிமுதல் செய்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து தொடர்ந்து ஆந்திர மாநிலத்திற்க்கு ரேசன் அரிசி கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலைமையில் வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது வாணியம்பாடியிலிருந்து ஜோலார்பேட்டை சென்றுக் கொண்டிருந்த மினிலாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் ரேசன் அரிசி இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த பெருமாள் (வயது 39), சஞ்சீவி (வயது 21) ஆகியோரை கைது செய்து, லாரியில் இருந்த 4 டன் ரேசன் அரிசியுடம் லாரியை பறிமுதல் செய்தனர்.

இதே போல் உமாராபாத் பகுதியில் ரோந்து சென்ற போது, அப்பகுதி மக்கள் அளித்த ரகசிய தகவலின் பேரில் பிச்சைமுத்து( வயது 35) என்பவர் வீட்டின் அருகே பதுக்கி வைத்திருந்த ஒன்றரை டன் ரேசன் அரசியை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வேலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றபுலனாய்வு போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Updated On: 20 Jun 2021 3:58 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  2. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  4. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  5. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  6. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  7. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  8. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  9. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  10. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!