/* */

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு

வாணியம்பாடியில் நகர்புற தேர்தலில் பதிவாகும்  வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள கல்லூரியில் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

வாணியம்பாடியில் வாக்கு எண்ணும் மையம் அமையவுள்ள இடத்தில் கலெக்டர் ஆய்வு
X

வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா

நடைபெற உள்ள நகர்புற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்ததில் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் ஆலங்காயம், உதயேந்திரம், நாட்றம்பள்ளி ஆகிய 3 பேரூராட்சிகள் உள்ளிட்ட இடங்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் ஒரே இடத்தில் வாணியம்பாடி அடுத்த சின்ன வேப்பம்பட்டு பகுதியில் உள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட உள்ளது.

இன்று அந்த கல்லூரியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தேர்தல் பணியாளர்கள், வேட்பாளர்கள் முகவர்கள் நுழைவுவாயில் மற்றும் பதிவாகும் வாக்குகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ள பாதுகாப்பு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகியவை அமைக்க வரைபடம் மூலம் பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர் களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்

Updated On: 16 Dec 2021 4:13 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!
  2. வீடியோ
    தானாக வந்து மாட்டிக்கொண்ட Congress புள்ளிகள் | கதிகலங்கிய RahulGandhi...
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. சினிமா
    ஹாலிவுட் படங்களை பார்க்க விரைவில் தனிசேனல்..!
  5. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  6. குமாரபாளையம்
    மொழிபோர் தியாகிகள் நினைவு தூணின் முன்பு கட்டுமான பணி நிறுத்தம்!
  7. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  8. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  9. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  10. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை